Tuesday, August 31, 2010

http://padaipali.wordpress.com/2010/09/01/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95/

நேற்று மாலை மின்னஞ்சலில் வந்த அந்த பிஞ்சு முகம் இன்னும் நெஞ்சிலிருக்கிறது..அழகின் வடிவாய் புன்னைகைப் பூத்திருக்கிறாள் அவள்..அவள் புகைப்படத்தோடு,சேர்ந்து வந்த செய்தியும் இன்னும் அகலாமல் நெஞ்சில் கனக்கிறது.

—————————————————————————————————————————————————————-

இவள்தான் பூஜா..4 வயது பிஞ்சுக்குழந்தை.இந்த மழலையைத்தான் ஓர் பிச்சைக்காரன் கடத்தி வந்து தன்னுடன் பிச்சைஎடுக்க வைத்திருக்கிறான்.குழந்தைகள் பிச்சையெடுத்தால்,இரக்கம் கொண்டு காசு போடும் மக்கள் குணத்தை புரிந்துகொண்டு பூஜாவை பயன்படுத்தியிருக்கிறான்.இதுமாதிரி பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளைக் கடத்தும் வழக்கம் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறது..அனாதையானதால் பிச்சை எடுப்பவர்கள் ஒருபுறம்..அனாதையாக்கப் பட்டு பிச்சை எடுக்க வைக்கப்படுபவர்கள் மறுபுறம்.

பூஜாவை கடத்தியப் பிச்சைக்காரன் கேரளா போலீசாரிடம் சிக்கியுள்ளானாம்..பிச்சைக்காரனிடமிருந்து காப்பாற்றப் பட்ட குழந்தை தற்போது கேரளா,திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா சிசு பவன் எனும் அனாதைக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறாளாம்.

போலீசார் குழந்தை குறித்தும்,அவள் இருப்பிடம் குறித்தும் அறிந்து கொள்ள பிச்சைக்காரனிடம் விசாரிக்க முயன்றபோது..அவன் காது கேட்காத,வாய் பேசமுடியாத ஆள் என்பதை அறிந்திருக்கிறார்கள்.இதனால் பூஜா குறித்த மேற்கொண்ட தகவல்களை அறிய இயலாமல் போய்விட்டதாம்.

குழந்தை கூறியுள்ள தகவல்:

தாய்மொழி-ஹிந்தி

தந்தை பெயர்-ராஜூ

தாயார் பெயர்-முன்னி தேவி

எனவும் மற்றும் ஒரு அக்கா,ஒரு தம்பி தனக்கு இருப்பதாவும்,தன்னுடைய ஊர் நாகலூப்பி எனவும் கூறியிருக்கிறாளாம்.ஆனால் விசாரித்து பார்த்ததில் அப்படியோர் ஊர் எங்கும் இல்லை என அறிந்திருக்கிறார்கள்..குழந்தையின் மொழியில் கூறுவதால் அறிய இயலாமலிருக்கலாம்..இல்லை அவளுக்கு அது சொல்ல தெரியாமலிருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

எனவே யாருக்கேனும் இக்குழந்தைப் பற்றிய தகவல் தெரிந்தாலோ,அல்லது குழந்தை கூறிய இடத்தைப் பற்றி அறிந்திருந்தாலோ,குழந்தையை காணாமல் தவிக்கும் பெற்றோரைப் பற்றிய தகவல் கிடைத்தாலோ திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா சிசு பவன் அனாதைக் காப்பகத்தை(nirmala sisu bhavan,trivandrum,kerala,india) அணுகுமாறு மின்னஞ்சலில் செய்தி சொல்லியிருக்கிறார்கள்.

நிர்மலா சிசு பவன் அனாதைக் காப்பகம்

தொலைபேசி எண் :0471-2307434


—————————————————————————————————————————————————————-

இது குறித்து நண்பர்களும் தங்கள் வலைப்பதிவில் எழுதுமாறும்,தங்கள் நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் இத்தகவலை புகைப்படத்தோடு மின்னஞ்சலில் அனுப்பி குழந்தைக் குறித்த விபரங்களை அறியவும்,குழந்தையைக் காணாமல் தவிக்கும் பெற்றோருக்கு உதவவும் வேண்டுகிறேன்.

———————————————————————————————————————

No comments:

Post a Comment