skip to main |
skip to sidebar
உறக்கம் வரா இரவுகளில்..
பயணம்...
வாழ்க்கை
ஒரு நதியை
போல ஓடிக் கொண்டே
இருக்கிறது.
பல மேடுப்பள்ளங்களை
தாண்டி செல்கிறது.
பள்ளங்களில் தேங்கும்
நீரைப் பற்றி அதற்கு
கவலையில்லை.
ஆனால்,
மனம் மட்டும்
அந்த
பள்ளங்களை விட்டு
அகல்வதில்லை.
கலங்கிய மனம்...
வானத்தை முதலில்
நீரில் பார்த்தேன்.
கலங்கலாகத் தெரிந்தது.
நிமிர்ந்து
நான் வானத்தைப்
பார்த்தேன்.
கலங்கலாகவே காட்சியளித்தது.
வட்டப் பாதை... இலக்குகள் தான்
வெற்றியை தீர்மானிக்கின்றன.
வெற்றி தான்
வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.
அதிசயமாக,
வாழ்க்கை தான்
இலக்குகளை தீர்மானிக்கின்றன.
No comments:
Post a Comment