Monday, November 15, 2010

ஈழமும் நானும்..

ஈழமும் நானும்..


என்னிடம் என் நண்பர்கள், பெற்றோர்கள் கேட்கும் கேள்வி இது.

என் உனக்கு இந்த வேண்டாத வேலை ?
ஈழத்திற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு IT Professional மாத்ரியாகவா பேசுகிறாய்?

இன்னும் பல கேள்விகள் ...

முதலில் ஈழம் பெயர் எப்படி வந்தது ?

தமிழ் நாட்டில் மதுரைக்கு அருகில் இருக்கும் ஊர் திருப்பரங்குன்றம். இங்கே தமிழ் கடவுள் பிறந்து திருமணம் செய்ததாக கூறுவார்கள். 1-ம் நுற்றாண்டில் இங்கு விட்டை இல்லம் என்றும் விட்டின் உரிமையாளரை ஈழர் என்றும் கூறுவார்கள் என்று palaeographical ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதில் இருந்து வந்த சொல்லே ஈழம் ஆகும்.
ஒன்பதாம் நுட்ரண்டில் வாழ்ந்த சோழ, பலவ காலங்களில் இல்லன்கையை ஈழ தேசம், ஈழ வணிகம் என்றே அழைத்துள்ளனர்.
தமிழர் பெருமை பாடும் அகநானு று, குருந்தோகை போன்ற நூல்கயில் ஈழம் வார்த்தை உள்ளது. பட்டினபாலை நுல்லில் ஈழத்து உணவு பற்றி காவேரி பட்டினம் பற்றி எழதும் பொது கூறுப்படுள்ளது.

நான் பிறந்ததும் அதே திருப்பரன்குன்றதில் தான்.
நான் பிறந்த 1983-ம் வருடத்தில் தான் சிங்களவர்கள் தமிழர்களை பெரும் அளவு தாக்கினர்.
நான் பிறந்த மாதத்தை தான் கருப்பு ஜுலையாக அனுஸ்டிகபடுகிறது.
நான் பிறந்த தேதி தான் கரும் புலிகள் தினம் என கூறுகின்றனர்.

இதை விட நான் தமிழன்.
அதையும் விட நான் மனிதன்.

"மனிதர் நோக
மனிதர் பார்க்க
வாழ்க்கை இனி உண்டோ.."
-பாரதி.


மனிதனாக பிறந்ததினால் , மனிதனாக வாழுவதினால், மனிதர்களை நேசிபதினால், மனிதம் போற்றுவதினால் நான் ஈழத்தையும் ஈழமக்களையும் நேசிகின்றேன்.

-நன்றி.

1 comment:

  1. மிகவும் சரியான வாதம் , இல்லை,,, உண்மை

    ReplyDelete