இந்தியாவில் வாழும் இந்திய தமிழ் மீனவனை
இலங்கை இராணுவத்திடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை.
இவன் போய் ஈழ தமிழனை
இலங்கை இராணுவத்திடம் காப்பாற்ற போகிறானா ?
காக்கும் கடவுளின் பெயரை வைத்து கொண்டு
அழிக்கும் தொழிலை செய்கிறான்.
நாடக கலைஞனின் நாடகம்,
நம்பவைக்க சில ஊடகம்.
தலைவர்களிடம் மட்டுமே ஒற்றுமை,
நம்மிடமோ வேற்றுமை.
கேட்பவன் கேன்னையன் என்றால்
பெரியாரும் பஞ்சாங்கம் பார்த்தர்னு சொல்லுவாங்க...
போங்கப்பா .. போய்,
இனிமேலாவது பிள்ளை குட்டியை படிக்க வைங்கப்பா...
No comments:
Post a Comment