Friday, November 19, 2010

"இல்லை ஆனால் இருக்கு"..



"காஷ்மீரிகள் எப்போதும் தன்னை இந்தியன் என்று நினைத்தது இல்லை"

என்று உண்மையை சொன்னவங்கள விட்டுட்டாங்க.

ஆனால் நம்ம மீனவனுக்காக எதிரிகளுடன் சண்டை போடா தயார்

என்றவர்களை கைது பண்ணுவாங்க..

இவங்க ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்..

இறையாண்மை என்பது நாட்டிற்கு உள்ளே இருக்க வேண்டும்..

வெளியே அல்ல...

இவங்க அதை உள்ளே இருப்பது போல் வெளியே காட்டிகிறங்க...

"இல்லை ஆனால் இருக்கு"..

அந்த காலம் முதல்

சளுகியனுக்கு சோழன் என்றால் ஆகாது,

சோழனுக்கு சிங்களவன் என்றால்ஆகாது,

பல்லவனுக்கு சளுகியன் என்றால் ஆகாது.

அது இன்று வரை தொடர்கிறது.

இதில் எங்கே ஒருமைப்பாடு உள்ளது ?

நாம் இங்கே இருந்து கேரளா போனால்

அவன் நம்மை பாண்டி என்று தான் பார்ப்பான்.

கர்நாடக போனால் தமிழன் என்பான்.

வேறு மாநிலம் போனால் மதராசி என்பான்.

யாராவது என்னை இந்தியனாக பார்த்தால் மட்டும்மே

என்னால் இந்தியன் என்பதை உணர முடியும்.

அதுவரை நான் தமிழன் மட்டுமே...

No comments:

Post a Comment