Wednesday, December 15, 2010

'இவர்கள் உருப்படவே மாட்டார்கள்'


இன்று அரசுப்பேருந்தில் காலை பயணத்தின் போது என்னுடன் ஒரு பெரியவரும் அரசுப்பள்ளி சிறுவர்களும் பயணம் செய்தனர். சிறுவர்கள் வழக்கம் போல் ஆடிப்பாடி வந்தனர். இதை கண்ட பெரியவர் இவர்களை பார்த்து 'இவர்கள் உருப்படவே மாட்டார்கள்' என்றார்.

எனக்கு தெரிந்து நாம் நாட்டில் மட்டுமே மூத்த குடிமக்கள் இளய குடிமக்களை அப்படி கூறுகின்றனர். இந்த வயோதிகர்களை பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இவர்கள் எங்களுக்கு என்ன மாதிரியான உலகத்தை வைத்துள்ளனர். குப்பையான காடுகள் இல்லா உலகை கொடுத்துள்ளனர்.

இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது?

மேலும் அந்த பெரியவர் தன் பேரன் படிக்கும் மெட்ரிக் பள்ளி பற்றி பெருமையாக கூறினார்.

இது என்னை மேலும் யோசிக்க வைத்தது.

பள்ளிப் படிப்பை எல்லோருக்கும் சமமாக கொடுக்காதது யார் குற்றம்?

பள்ளிகள் ஏன் சமமாக நடத்த முடியவில்லை?

இதற்கு நாம் தானே காரணம்?

படிப்பை ஒருவருக்கு உயர்வாக கொடுக்கும் போது மற்றவருக்கு ஏன் அதை கொடுக்க முடியவில்லை?

இதற்கு காரணம் நாமும் நாம் அரசாங்கமும் தானே.

இன்று அரசுப்பள்ளி இல்லாத கிராமம் உள்ளது. அரசு மருத்துவமனை இல்லாத கிராமமும் உள்ளது.

ஆனால், அரசு மதுப்பான கடைகள் இல்லாத கிராமமோ ஏன் விதியோ கூட உண்டோ?

ஆனால் அனைத்திற்கும் காரணம் அரசு என்று நாம் தப்பிக்க முடியாது.

நாளைய சமுதாயதிற்கு நாம் என்ன விட்டு செல்கிறோம் என்பதை இந்த பெரியவர்கள் உணர வேண்டும்.

இதே தவறை நாம் இவர்களுக்கு செய்து கொண்டே இருந்தால் நாளைய சமுகம் நம்மை காறி உமிழும்.

இனியாவது நாம எதாவது செய்யணும் Boss.. 

Thursday, November 25, 2010

நாடக நடிகன்


இந்தியாவில் வாழும் இந்திய தமிழ் மீனவனை

இலங்கை இராணுவத்திடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

இவன் போய் ஈழ தமிழனை

இலங்கை இராணுவத்திடம் காப்பாற்ற போகிறானா ?

காக்கும் கடவுளின் பெயரை வைத்து கொண்டு

அழிக்கும் தொழிலை செய்கிறான்.

நாடக கலைஞனின் நாடகம்,

நம்பவைக்க சில ஊடகம்.

தலைவர்களிடம் மட்டுமே ஒற்றுமை,

நம்மிடமோ வேற்றுமை.

கேட்பவன் கேன்னையன் என்றால்

பெரியாரும் பஞ்சாங்கம் பார்த்தர்னு சொல்லுவாங்க...

போங்கப்பா .. போய்,

இனிமேலாவது பிள்ளை குட்டியை படிக்க வைங்கப்பா...

Friday, November 19, 2010

"இல்லை ஆனால் இருக்கு"..



"காஷ்மீரிகள் எப்போதும் தன்னை இந்தியன் என்று நினைத்தது இல்லை"

என்று உண்மையை சொன்னவங்கள விட்டுட்டாங்க.

ஆனால் நம்ம மீனவனுக்காக எதிரிகளுடன் சண்டை போடா தயார்

என்றவர்களை கைது பண்ணுவாங்க..

இவங்க ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்..

இறையாண்மை என்பது நாட்டிற்கு உள்ளே இருக்க வேண்டும்..

வெளியே அல்ல...

இவங்க அதை உள்ளே இருப்பது போல் வெளியே காட்டிகிறங்க...

"இல்லை ஆனால் இருக்கு"..

அந்த காலம் முதல்

சளுகியனுக்கு சோழன் என்றால் ஆகாது,

சோழனுக்கு சிங்களவன் என்றால்ஆகாது,

பல்லவனுக்கு சளுகியன் என்றால் ஆகாது.

அது இன்று வரை தொடர்கிறது.

இதில் எங்கே ஒருமைப்பாடு உள்ளது ?

நாம் இங்கே இருந்து கேரளா போனால்

அவன் நம்மை பாண்டி என்று தான் பார்ப்பான்.

கர்நாடக போனால் தமிழன் என்பான்.

வேறு மாநிலம் போனால் மதராசி என்பான்.

யாராவது என்னை இந்தியனாக பார்த்தால் மட்டும்மே

என்னால் இந்தியன் என்பதை உணர முடியும்.

அதுவரை நான் தமிழன் மட்டுமே...

Monday, November 15, 2010

ஈழமும் நானும்..

ஈழமும் நானும்..


என்னிடம் என் நண்பர்கள், பெற்றோர்கள் கேட்கும் கேள்வி இது.

என் உனக்கு இந்த வேண்டாத வேலை ?
ஈழத்திற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு IT Professional மாத்ரியாகவா பேசுகிறாய்?

இன்னும் பல கேள்விகள் ...

முதலில் ஈழம் பெயர் எப்படி வந்தது ?

தமிழ் நாட்டில் மதுரைக்கு அருகில் இருக்கும் ஊர் திருப்பரங்குன்றம். இங்கே தமிழ் கடவுள் பிறந்து திருமணம் செய்ததாக கூறுவார்கள். 1-ம் நுற்றாண்டில் இங்கு விட்டை இல்லம் என்றும் விட்டின் உரிமையாளரை ஈழர் என்றும் கூறுவார்கள் என்று palaeographical ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதில் இருந்து வந்த சொல்லே ஈழம் ஆகும்.
ஒன்பதாம் நுட்ரண்டில் வாழ்ந்த சோழ, பலவ காலங்களில் இல்லன்கையை ஈழ தேசம், ஈழ வணிகம் என்றே அழைத்துள்ளனர்.
தமிழர் பெருமை பாடும் அகநானு று, குருந்தோகை போன்ற நூல்கயில் ஈழம் வார்த்தை உள்ளது. பட்டினபாலை நுல்லில் ஈழத்து உணவு பற்றி காவேரி பட்டினம் பற்றி எழதும் பொது கூறுப்படுள்ளது.

நான் பிறந்ததும் அதே திருப்பரன்குன்றதில் தான்.
நான் பிறந்த 1983-ம் வருடத்தில் தான் சிங்களவர்கள் தமிழர்களை பெரும் அளவு தாக்கினர்.
நான் பிறந்த மாதத்தை தான் கருப்பு ஜுலையாக அனுஸ்டிகபடுகிறது.
நான் பிறந்த தேதி தான் கரும் புலிகள் தினம் என கூறுகின்றனர்.

இதை விட நான் தமிழன்.
அதையும் விட நான் மனிதன்.

"மனிதர் நோக
மனிதர் பார்க்க
வாழ்க்கை இனி உண்டோ.."
-பாரதி.


மனிதனாக பிறந்ததினால் , மனிதனாக வாழுவதினால், மனிதர்களை நேசிபதினால், மனிதம் போற்றுவதினால் நான் ஈழத்தையும் ஈழமக்களையும் நேசிகின்றேன்.

-நன்றி.

Friday, November 12, 2010

ஏன் வேண்டும் ஈழம் ?


http://ragu2ugar.blogspot.com/



**எனக்கு தெரிந்த, படித்த குறிப்பை மட்டுமே பதிவு செய்கிறேன்.
இது என் ஈழ நண்பர்கள் அளித்த குறிப்புகள்.


இலங்கையின் பூர்வீக குடிமக்கள் தமிழர்களே! சிங்களவ‌ர்களல்லர்!!

இலங்கை - தமிழர்களுக்கே சொந்தம் - மறுக்க முடியாத சரித்திர உண்மைகள்!
சிங்களர்கள் வங்காளத்திலிருந்து தமிழர்களுக்குப் பின்னர் குடியேறியவர்களேயென்று இலங்கை சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்...றார்கள். இலங்கை சேதத்தின் புராதனக் குடிகள் தென்னிந்தியத் தமிழர்களேயன்றி சிங்களர்களல்ல. இந்த உண்மையை நிரூபணம் செய்வதற்கு சரித்திர ஆதாரங்கள் மலிந்து கிடக்கின்றன. டாக்டர் ஜி.ஸி.மெண்டிஸ் என்பவர் தாம் வரைந்துள்ள இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும் என்ற நூலில் இலங்கையின் பூர்வீக மக்கள் வேடர்களே யென்றும், கி.மு. 543 ஆம் ஆண்டில் வந்த சிங்களர்கள் இலங்கைக்கு அந்நியர்களாகவேயிருந்தார்களென்றும் திட்டமாகச் சொல்லியிருக்கிறார். அதே புத்தகத்தின் 14 ஆம் பக்கத்தில் சிங்களர்களின் வருகைக்குச் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே ஆரியத் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதுபோல் திரு.கீஜர் என்னும் பிரபல சரித்திர ஆராய்ச்சியாளர் தம்முடைய மகாவம்சத்தில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்,
இலங்கையின் பூர்வீகக் குடிகள் நாகர்களும் யக்ஷர்களுமே, சிங்களர்களின் வருகைக்கு முன்னால் இவ்விரு வகுப்பைச் சேர்ந்த மன்னர்களும் இலங்கையை ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களுள் மணியக்கிகா, மஹேதரன், குலோதரன் ஆகிய நாக வம்சத்து மன்னர்களும், குவினி, மஹாகல சேனன் ஆகிய யக்ஷ வம்சத்து மன்னர்களும் குறிப்பிடத்தகுந்தவர்கள். கி.மு.543 ஆம் வருடத்திற்கு முன்பு வரை சிங்களவர்கள் இலங்கைக்கு அந்நியர்களாகவே இருந்தார்கள்.



நாகர்களும் யக்ஷர்களும் யார்?

நாகர்கள் என்ற பதத்திற்கும், யக்ஷர்கள் என்ற பதத்திற்கும் முறையே சர்ப்பங்களை பூஜிப்பவர்கள் பிசாசங்களைப் பூஜிப்பவர்கள் என்று பொருள். இலங்கையிலிருந்த புராதனத் தமிழர்கள் சர்ப்பங்களையும் பிசாசங்களையும் பூஜை செய்பவர்களா...க இருந்து அது காரணமாக இப்பெயர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடும். தவிர பண்டைக் காலத்து திராவிடர்களிற் பொரும்பாலோர் வேட்டையாடுவதையே ஜீவனமாகக் கொண்டிருந்தார்கள்.

சிங்களவ‌ர் சரிதை என்ன கூறுகிறது?

ஆகையால், வேடர்களென்ற பெயரும் அவர்களுக்கு உண்டாயிற்று. இந்த அபிப்பிராயத்தை திரு.ஜான் எம்.செனிவிரத்னா என்ற பிரபல சரித்திர நூலாசிரியர் தம்முடைய சிங்களர் சரிதை என்ற புத்தகத்தில் ஆதரிக்கிறார். அவரும் வித்யானுகூல லங்கா இதிகாசபா என்ற நூலின் ஆசிரியரான திரு.டப்ளியூ.எம்.பெரேராவும் இலங்கை புராதனக்குடிகளாகிய நாகர், யக்ஷர், வேடர் ஆகியோர்களைப்பற்றி பின்வருமாறு எழுதியிருக்கின்றார்.
நாகர், யக்ஷர்,வேடர்ஆகியோர் திராவிட வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மணிக்கீகா, மஹோதரன், குலோதரன், குவினி, ராவணன், மஹாகல சேனன் முதலான திராவிட மன்னர்கள் சிங்களவர்களின் வருகைக்கு முன்னால் இலங்கையை ஆண்டு வந்தவர்கள் அய்ரோப்பியர்கள் அபிப்பிராயம். மேற்படி ஆதாரங்களைத்தவிர டாக்டர் கால்டுவெல், டாக்டர் ஜி.யு.போப் முதலான ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் இவ்வாறே கூறியிருக்கின்றார்கள். தமிழர் என்ற தமிழ்ப்பதத்திற்கு திராவிடர் என்பது சமஸ்கிருத மொழிபெயர்ப்பென்றும் ஆகையால் இலங்கையின் பூர்வீகக் குடிகளான திராவிடர்கள் தென்னிந்தியத் தமிழர்களேயென்றும் அவர்கள் ஊர்ஜிதம் செய்திருக்கின்றனர்.

முதலில் போர்த்துக்கீசர், பின்னர் ஒல்லாந்தர், இறுதியாக ஆங்கிலேயர் இலங்கையை முற்றாக‌க் கைப்பற்ற முன்னர் அங்கு மூன்று சாம்ராஜ்ஜியங்கள் இருந்தன. இதில் தமிழர்களுகென்று ஒரு தனிச் சாம்ராஜ்ஜியமும் இருந்தது. கடைசியாக கண்டி சாம்ராஜ்ஜியத்தில் சிங்களவரை ஆண்ட இராஜ ராஜசிங்கன் கூட தமிழன் (நாயக்கன்) ஆகும். இது சரித்திரத்தை நன்கு அறிந்த சிங்களவருக்கும் தெரியும். ஆங்கிலேயர்தான் ஆட்சி புரிவதற்கு இலகுவாக, மூன்று சாம்ராஜ்ஜியங்களையும் ஒன்றாக்கி இலங்கை என்ற நாட்டை உருவாக்கினார்கள். ஆனால், அவர்கள் சுதந்திரம் கொடுத்துவிட்டு ஓடும் போது தங்கள் இணைத்ததைப் பிரித்துவிட்டுப் போகாதமையினாலேயே இன்று நாம் சிங்களவனின் கொடுங்கோல் ஆட்சியில் செத்து மடிகின்றோம். எனவே நாம் புதிதாகவொன்றும் தனி நாடு கேட்டுப் போராடவில்லை. எமது பூர்வீக நாட்டைத்தான் திரும்ப அடைய முயற்சிக்கின்றோம்.

-நன்றி.





Sunday, October 31, 2010

உறக்கம் வரா இரவுகளில்..

பயணம்...

வாழ்க்கை
ஒரு நதியை
போல ஓடிக் கொண்டே
இருக்கிறது.

பல மேடுப்பள்ளங்களை
தாண்டி செல்கிறது.

பள்ளங்களில் தேங்கும்
நீரைப் பற்றி அதற்கு
கவலையில்லை.

ஆனால்,
மனம் மட்டும்
அந்த
பள்ளங்களை விட்டு
அகல்வதில்லை.



கலங்கிய மனம்...

வானத்தை முதலில்
நீரில் பார்த்தேன்.
கலங்கலாகத் தெரிந்தது.

நிமிர்ந்து
நான் வானத்தைப்
பார்த்தேன்.
கலங்கலாகவே
காட்சியளித்தது.

வட்டப் பாதை...
இலக்குகள் தான்

வெற்றியை தீர்மானிக்கின்றன.

வெற்றி தான்

வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.

அதிசயமாக,

வாழ்க்கை தான்

இலக்குகளை தீர்மானிக்கின்றன.

Thursday, October 21, 2010

நிஜமான ஹீரோ

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே . அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம் . உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும் , தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக , காவல் துறை அதிகாரியாக , ஆசிரியாராக , சமுக சேவகராக , துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம் . அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம் . அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும் . நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம் .

http://itsmeena.files.wordpress.com/2010/10/krishnan_quote.jpg?w=614&h=268

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன் . இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் . ஒரு தமிழனாக , மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன் . இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது . இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம் , Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள் . இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது . இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும் , தமிழனும் பெருமை பட வேண்டும் . ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை .

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார் ?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல் .

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம் . சில சமயம் காசு போடுவோம் . அதற்கும் மேல் என்ன செய்வோம் ? அதை மறக்க முயற்சிப்போம் . ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார் . அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார் . கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார் . மழை , புயல் , தேர்தல் , கலவரம் , பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார் . தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை . இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது .

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த , விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர் . சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார் . இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார் . இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார் . இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது , “ அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க . நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார் . இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் நீ இவர்களை பார்த்துக்கொள் , நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிருக்கிறார் . இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன் . எழுதும் இந்த கணமும் கூட .

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம் . பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம் . முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம் , இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை . சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா ? அவர்கள் என்ன செய்தார்கள் . நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள் . அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள் . இவர் தான் உண்மையான ஹீரோ . சாகசம் செய்வது சாதனை அல்ல . இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை . எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ . இவரை பார்க்கவும் , இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும் , இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும் , பொருள் உதவி செய்யவும் , இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன் , பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில் .

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி .

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள் . பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே .

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம் . ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள் . நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம் . இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்